திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ராஜகிரி;2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

ராஜகிரி; 2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

05.08.10 விமான பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக நஷ்டஈடு கோரலாம் என்று விமான போக்கு வரத்துத்துறை அறிவித்துள்ளது. இதற்காக கொள்கை திட்ட பரிந்துரைகள் சிலவற்றை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.


ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக வருமானால், அதில் பயணம் செய்யும் பயணிகள் நஷ்டஈடு கோரலாம். ஆனால் அந்த தாமதத்துக்கு விமான நிறுவனம் நேரடி காரணமாக இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் பயணிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை இழப்பீடு தொகை பெற முடியும். 24 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு, தங்கும் வசதி போன்றவற்றை விமான நிறுவனம் செய்து கொடுக்க வேண்டும். அதை பெறும் உரிமை பயணி களுக்கு உள்ளதாக விமானப்போக்குவரத்துத் துறை கூறி உள்ளது.

விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் பயணிகளுக்கு உதவும் வழி காட்டி குறிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (வியாழன்) முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

நஷ்டஈடு பெற விரும்பும் பயணிகள் நுகர்வோர் கோர்ட்டை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக