ராஜகிரி: 28.07.10 பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் பலி?
பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மலைப் பகுதியில் பயணிகள் விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 152 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கியிலிருந்து கராச்சி நோக்கி 152 பயணிகளுடன் ஏர் ப்ளூ விமானம் ஒன்று புறப்பட்டது. இன்று காலை இஸ்லாமாபாத் அருகே மர்கல்லா மலைப்பகுதியை ஒட்டி வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இதில் சிறப்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக