திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு ('டேட் ரேன்ஜ் பேர்')

கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டணத்தை, ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


இதுகுறித்து ஏர்இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்கேற்ப, சவுகரியமான, சுலபமான மற்றும் சிக்கனமான, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டண திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில், நாட்டின் 141 இடங்களுக்கு பயணிக்கலாம்.


தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு, 3 அல்லது 5 நாட்களுக்கு முன் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கும், ஆமதாபாத், நாக்பூர், அவுரங்காபாத், லக்னோ, இந்தூர், சண்டிகார், ஜெய்ப்பூர், மதுரை, கோவை, கவுகாத்தி, இம்பால் உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லலாம்.


வழக்கமான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதை பொறுத்தும், விமானத்தில் இருக்கைகள் இருப்பதை பொறுத்தும், அதற்கேற்ப, 'டேட் ரேன்ஜ் பேர்'க்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். இதுதவிர, 7 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள் கொண்ட, 'அட்வான்ஸ் பர்சேஸ் எக்ஸ்கர்ஷன்' என்ற, பயணிகளுக்கு பயன் அளிக்கும் திட்டமும் உள்ளது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

திருச்சியில் இருந்து செல்லும் துபாய் விமானம் தாமதம் பயணிகள் கடும் அவதி

திருச்சியில் இருந்து செல்லும் துபாய் விமானம் தாமதம் பயணிகள் கடும் அவதி

19.04.2011 திருச்சியில் இருந்து துபாய் செல்லும் விமானம் தாமதமானதால், பயணிகள் 5 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் தினமும் இயக்கப்படுகிறது. நேற்று காலை 10.35 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரும் ஏர்இந்தியா விமானம் 11.40 மணிக்கு துபாய் செல்ல வேண்டும். ஆனால் விமானம் நேற்று மாலைக்கு பின்னரே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் விமானம் வருவதற்கு 3 மணிநேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இமிகிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகள் முடித்து காத்திருந்தனர்.

இதற்கிடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மாற்று விமானம் ஏற்பாடு செய்தது. அந்த விமானம் மும்பையிலிருந்து மாலை 4.05க்கு திருச்சி வந்தது. பின்னர் அதில் மாலை 5 மணியளவில் 124 பயணிகள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செவ்வாய், 22 மார்ச், 2011

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் இஷ்டத்துக்கும் கட்டணங்களை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளன தனியார் விமான நிறுவனங்கள்.
கடந்த தீபாவளி சீஸனில் பல மடங்கு கட்டணங்களை ஏற்றி வசூல் பார்த்தன இந்த விமான நிறுவனங்கள். டெல்லி - மும்பை மார்க்கத்தில் 5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலித்தனர். இதைத் தொடர்ந்து அரசு தலையிட்டு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியது.
இப்போது, ஹோலி பண்டிகை சீஸன் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது டெல்லி, மும்பை, லக்னோ, புனே உள்ளிட்ட செக்டார்களில். இந்த மார்க்கத்தில் செல்லும் தனியார் விமானங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. கோ ஏர் போன்ற குறைந்த கட்டண விமானங்களில் 200 சதவீத உயர்வு காணப்பட்டது.
டெல்லி - மும்பைக்கு வெள்ளிக்கிழமை மாலை ஜெட் ஏர்வேஸில் ரூ 16,400 வசூலித்தனர். கிங் பிஷரில் ரூ 14800 வசூலிக்கப்பட்டது. சாதாரண நாட்களில் இந்த மார்க்கத்தில் அதிகபட்ச கட்டணமே ரூ 5000 முதல் 6000க்குள்தான். வழக்கமாக ரூ 4000 வசூலிக்கும் கோஏர், இந்த வார இறுதியில் ரூ 9,706 வசூலித்தது.
இதேபோல டெல்லி - லக்னோவுக்கு சாதாரண நாட்களில் ரூ 3000க்குள்தான் கட்டணம் இருக்கும். ஆனால் இந்த முறை ரூ9000க்கும் அதிகமாக வசூலித்தனர். அதிலும் கோ ஏர் விமானத்தில் மட்டும் ரூ 14306 வசூலித்தது பயணிகளை அதிர வைத்தது.
அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிலையான ஒரு கட்டண விகிதத்தை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

விமான எரிபொருள் விலை உயர்வு.. டிக்கெட் விலையும் உயர்கிறது!

விமானங்களுக்கு நிரபப்படும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை மேலும் உயர்த்தப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்த விலை உயர்வு பயணிகளை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை ஒன்பதாவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியல், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருளுக்கு கூடுதலாக ரூ.2,104 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் லிட்டர் விமான பெட்ரோல் இப்போது ரூ.53,538-ஆக விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.53,538-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம்தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து விமான சேவை நிறுவனங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில் எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக, டிக்கெட் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் எந்த அறிவிப்புமின்றி 2 முறை டிக்கெட் விலையை உயர்த்திவிட்டது நினைவிருக்கலாம்.