திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

திருச்சியில் இருந்து செல்லும் துபாய் விமானம் தாமதம் பயணிகள் கடும் அவதி

திருச்சியில் இருந்து செல்லும் துபாய் விமானம் தாமதம் பயணிகள் கடும் அவதி

19.04.2011 திருச்சியில் இருந்து துபாய் செல்லும் விமானம் தாமதமானதால், பயணிகள் 5 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் தினமும் இயக்கப்படுகிறது. நேற்று காலை 10.35 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரும் ஏர்இந்தியா விமானம் 11.40 மணிக்கு துபாய் செல்ல வேண்டும். ஆனால் விமானம் நேற்று மாலைக்கு பின்னரே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் விமானம் வருவதற்கு 3 மணிநேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இமிகிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகள் முடித்து காத்திருந்தனர்.

இதற்கிடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மாற்று விமானம் ஏற்பாடு செய்தது. அந்த விமானம் மும்பையிலிருந்து மாலை 4.05க்கு திருச்சி வந்தது. பின்னர் அதில் மாலை 5 மணியளவில் 124 பயணிகள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக