திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு ('டேட் ரேன்ஜ் பேர்')

கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டணத்தை, ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


இதுகுறித்து ஏர்இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்கேற்ப, சவுகரியமான, சுலபமான மற்றும் சிக்கனமான, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டண திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில், நாட்டின் 141 இடங்களுக்கு பயணிக்கலாம்.


தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு, 3 அல்லது 5 நாட்களுக்கு முன் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கும், ஆமதாபாத், நாக்பூர், அவுரங்காபாத், லக்னோ, இந்தூர், சண்டிகார், ஜெய்ப்பூர், மதுரை, கோவை, கவுகாத்தி, இம்பால் உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லலாம்.


வழக்கமான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதை பொறுத்தும், விமானத்தில் இருக்கைகள் இருப்பதை பொறுத்தும், அதற்கேற்ப, 'டேட் ரேன்ஜ் பேர்'க்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். இதுதவிர, 7 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள் கொண்ட, 'அட்வான்ஸ் பர்சேஸ் எக்ஸ்கர்ஷன்' என்ற, பயணிகளுக்கு பயன் அளிக்கும் திட்டமும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக