திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்
மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ பிடித்ததாக எழும்பிய தவறான அலாரத்தினால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்கும் ஓடியதிலும், மேலே இருந்து குதித்ததிலும் 15 பேர் காயமுற்றனர். சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


இரவில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு : ஜெட் ஏர்வேஸ் ( 9 w 2302 ) விமானம் நேற்று மும்பையில் இருந்து 9 மணி அளவில் புறப்பட்டது . இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். மேலே கிளம்பிய சில நிமிடத்தில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீ பிடிப்பதாக சில பயணிகள் தெரிவித்தனர்.

பைலட்டுக்கு தெரிய வந்ததும் அவர் அபாய அலாரம் எழுப்பினார். பயணிகள் வெளியேறுமாறு கமாண்டர் உத்தரவிட்டுள்ளார்.

சிலருக்கு எலும்பு முறிவு: இதனையடுத்து இந்த அலார சப்தம் கேட்டதும் பயணிகள் பரிதவித்து போயினர். என்ன நடக்கப்போகிறதோ என மனம் பதை, பதைத்ததும் , பயணிகள் விமானத்திற்குள் இருந்து அங்கும், இங்குமாக ஓடினர். சில பயணிகள் கீழே குதித்தனர்.

இதனையடுத்து விமானம் அவசர, அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அனைத்து விமானிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 15 பயணிகள் காயமுற்றனர். 5 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

விமானத்தில் தீ எதுவும் பிடிக்கவில்லை, தீ போல ஒளி தெரிந்துள்ளது. இதனை தீ என பயணிகள் கருதி விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அலாரம் எழுப்பப்பட்டது என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. சென்னை வரவிருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு தாமதமாக நள்ளிரவில் 2 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.

சென்னை வந்த பயணியில் ஒருவர் கூறுகையில்; நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளோம். புகை வந்த விஷயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால் எல்லோரும் உயிரை காப்பாற்றிட என்ன செய்வது என்று திகைத்து போனோம் என்றார்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

சுதந்திர தின பாதுகாப்பு: சென்னை-திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை

ராஜகிரி: சுதந்திர தின பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களுக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் பார்வையாளர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. விமான நிலையத்துக்குள் நுழைவு டிக்கெட் வாங்கி பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நுழைவு டிக்கெட் விற்பனையும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் விமான நிலைய போர்டிகோ வரை மட்டுமே பார்வையார்கள் செல்ல முடியும். அதே போல திருச்சி உள்பட பல விமான நிலையங்களிலும் இந்தத் தடை விதி்க்கப்பட்டுள்ளது.

வரும் 20ம் தேதி வரை தடை நீடிக்கும் என்று தெரிகிறது

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ராஜகிரி;2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

ராஜகிரி; 2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

05.08.10 விமான பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக நஷ்டஈடு கோரலாம் என்று விமான போக்கு வரத்துத்துறை அறிவித்துள்ளது. இதற்காக கொள்கை திட்ட பரிந்துரைகள் சிலவற்றை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.


ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக வருமானால், அதில் பயணம் செய்யும் பயணிகள் நஷ்டஈடு கோரலாம். ஆனால் அந்த தாமதத்துக்கு விமான நிறுவனம் நேரடி காரணமாக இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் பயணிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை இழப்பீடு தொகை பெற முடியும். 24 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு, தங்கும் வசதி போன்றவற்றை விமான நிறுவனம் செய்து கொடுக்க வேண்டும். அதை பெறும் உரிமை பயணி களுக்கு உள்ளதாக விமானப்போக்குவரத்துத் துறை கூறி உள்ளது.

விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் பயணிகளுக்கு உதவும் வழி காட்டி குறிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (வியாழன்) முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

நஷ்டஈடு பெற விரும்பும் பயணிகள் நுகர்வோர் கோர்ட்டை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது