ராஜகிரி, ஜூலை 23: அபுதாபி - திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பழுதானதால் வெள்ளிக்கிழமை திருச்சியிலேயே நிறுத்தப்பட்டது.
அபுதாபி - திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. ஆனால், இந்த விமானத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், இந்த விமானத்தில் சென்னை செல்வதாக இருந்த 44 பயணிகள் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.விமானத்தில் பழுது சரிபார்க்கப்பட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக